சூர்யாவுடன் கைக்கோர்க்கும் வெற்றிப்பட இயக்குநர்

நடிகர் சூர்யா ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமாருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான என்.ஜி.கே, காப்பான் படத்தை தொடர்ந்து ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரலில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக இயக்குநர்கள் சிறுத்தை சிவா, கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், ஹரி ஆகியோருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சூர்யாவின் அடுத்த படத்தை ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமாருடன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரீயர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவிக்குமார் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பெயரிடப்படாத சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version