கோபிசெட்டிபாளையத்தில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது

கோபிசெட்டிபாளையத்தில் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சென்றதால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாழைகொம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக பொதுமக்கள் சார்பில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தப்பட்டது.

மேலும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பாடம் நடத்தியது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version