காதலிக்க மறுத்ததால் மாணவி கத்தியால் குத்தி கொலை

விருத்தாசலம் அருகே கொலை செய்யப்பட்டு உயிரிழந்த கல்லூரி மாணவி திலகவதிக்கு நியாயம் கேட்டு, குடும்பத்தினருக்குடன் சேர்ந்து பாமக சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி திலகவதியை ஆகாஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு கொலையாளி ஆகாஷை கைது செய்தனர். இந்நிலையில் திலகவதியின் உடலை பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி நேரில் பார்வையிட்டு, பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். இதனிடையயே கருவேப்பிலங்குறிச்சி சந்திப்பில் திலகவதிக்கு பாமகவினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது திலகவதியின் உறவினர்கள் மற்றும் பாமகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நீண்ட தூரம் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காவல்துறையினர் கலைந்து செல்ல சொல்லியும் கலையாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Exit mobile version