ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் போராட்டம்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே முல்லைத் தீவு பயணத்தின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத் தீவு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இதற்கிடையே அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய அவர்கள், ரணில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இந்நிகழ்வின் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Exit mobile version