ஸ்டெர்லைட் வழக்கை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானிசுப்பராயன் அமர்வு விசாரிக்கும்

ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி விலகிய நிலையில், நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சசிதரன் தெரிவித்தார். வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் அவர் பரிந்துரை செய்தார்.

இந்நிலையில், அவரது பரிந்துரையை ஏற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை புதிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Exit mobile version