ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, இன்று ஆலோசனை நடத்துகிறார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வருகிற டிசம்பர் 2ந் தேதி அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும், வருகிற டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் தேர்தல் விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தீவிரமாக நடைபெற்றது வருகிறது. வாக்குபதிவு இயந்திரம் கொண்டும் செல்லும் பணி மற்றும் சரிபார்க்கும் பணி ஆகிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாநில தேர்தல் ஆணையர், மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.

Exit mobile version