மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 11ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி மீனவர்களை விரட்டியடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக படகு ஒன்றிற்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version