தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான ஆவணங்களை ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒப்படைத்தார்.
2019 – 2022 ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில், தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஈ. பத்மநாபன் நியமிக்கப்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், தேர்தல் நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒப்படைத்தார். அந்த ஆவணங்களை அவர் ஏற்றுக் கொண்டதோடு, விரைவில் தேர்தல் அலுவலகத்தை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளன.