அதிமுக கூட்டணிக்கு சவுராஷ்ட்ரா மத்திய சபை ஆதரவு

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு சவுராஷ்ட்ரா மத்திய சபை ஆதரவளித்துள்ளது. கடந்த 23ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த சவுராஷ்ட்ரா மத்திய சபையினர் மக்களவை தேர்தலுக்கான தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அச்சபையின் மாநிலத் தலைவர் ஸ்ரீராம் சேகர், தமிழகத்தில் 27 லட்சம் சவுராஷ்டிர இன மக்கள் வசித்து வருவதாகவும் மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்தார். அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version