தாயை தரதரவென இழுத்து தாக்கிய மகன்… நாய்க்கு இருக்கும் நன்றி மகனுக்கு இல்லையா?

நாமக்கல் அருகே, பணத்திற்காக தாயை நடுரோட்டில் மகன் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, மூதாட்டியை தாக்கிய மகனை போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி பொன்னேரிபட்டியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான மூதாட்டி நல்லம்மாள். இவரது மகன் சண்முகம் என்பவர் தாயிடம் உள்ள பணம் மற்றும் சொத்தை கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த மூதாட்டி நல்லம்மாள், வழக்கம் போல் 100 நாள் வேலைக்கு சென்றிருந்தார். தனக்கு சொத்தை எழுதித் தராத ஆத்திரத்தில் இருந்த சண்முகம் தனது மனைவி ஜானகியுடன், மூதாட்டி நல்லம்மாள் வேலை செய்யும் இடத்திற்கே சென்றனர்.

பணியிலிருந்த தாயை மிரட்டிய அவர்கள், வீட்டுச் சாவியையும், பணத்தையும் கேட்டு தகராறு செய்தனர். ஆனால் அந்த மூதாட்டி எதற்கும் அசைவு கொடுக்காத நிலையில், ஆத்திரமடைந்த சண்முகம், தாயின் கையிலிருந்து வீட்டுச்சாவியை பறிக்க, நடுரோட்டில் நல்லம்மாளை தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கினர். நல்லம்மாளை அவரது மகன் சண்முகம் தரதரவென இழுத்துச்செல்லும் காட்சியும், வலி தாங்க முடியாமல் மூதாட்டி கதறும் காட்சியும் கல் நெஞ்சையும் கரையச் செய்தன.

கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அவரது மகன் சண்முகத்தை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மருமகள் ஜானகியை போலீஸார் தேடி வருகின்றனர்.

Exit mobile version