நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் உறை பனி நிலவும் : வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு குளிர் அதிகமாக இருக்கும் என்றும் உறை பனி நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவித்த வானிலை ஆய்வு மையம், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறியுள்ளது. 

Exit mobile version