முதலமைச்சர் மீது அவதூறு சுமத்துவது அரசியல் நாகரிகமற்ற செயல்

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மீது ஸ்டாலின் அவதூறு சுமத்துவது, அரசியல் நாகரிகமற்ற செயல் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்துள்ளனர். கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தி.மு.க கட்சிக்கு தலைவர் ஆனதையே முதலமைச்சர் ஆனது போன்று ஸ்டாலின் நினைப்பதாக தெரிவித்தார்.

திமுகவில் ஒரு குடும்பம் மட்டுமே தலைமை பதவியை வகித்து வருவதாகவும் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழக அரசு வழங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்புக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதால், அதனை குழைக்கும் விதத்தில் முதலமைச்சர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Exit mobile version