ஆகஸ்ட்.1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் – அமைச்சர் காமராஜ்

ஆகஸ்ட்1-ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம், ஆகஸ்ட்1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version