சேலத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகள் பறிமுதல்

சேலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 பட்டு புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மக்களவை தேர்தலில் வேட்பாளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதை தடுக்க சேலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் இரும்பாலை பிரிவு ரோடு, சேகோசர்வ் பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்ததில் அதில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 பட்டு புடவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த புடவைகளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version