மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவ ஆலய ஓட்டம் துவங்கியது

மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் மந்திர கோஷத்துடன் சிவ ஆலய ஓட்டத்தில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

கன்னியாகுமரியில் முன்சிறை திருமலை மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெற்றது. இதில் திருக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திகரை உள்ளிட்ட 12 ஆலயங்களிலிருந்து சிவ பக்தர்கள் மந்திர கோஷத்துடன் பாதயாத்திரையாக சென்றனர். இந்த ஓட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Exit mobile version