தேர்வு அட்டவணை முன்பே வெளியாவதால் தேர்வு அச்சம் நீங்கிவிட்டது -அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

பள்ளி தேர்வு அட்டவணை, தேர்வு முடிவு வெளியிடும் தேதி குறித்த தகவல்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படுவதால், மாணவர்களுக்கு தேர்வு மீதான அச்சம் நீங்கிவிட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், நாட்டிலேயே தமிழக பள்ளிக் கல்வித்துறை சிறந்து விளங்கி வருவதாகவும், போட்டித் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்பதாகவும் கூறினார்.

Exit mobile version