ஓடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1400 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்

விழுப்புரம் அருகே ஓடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1400 லிட்டர் எரிசாராயத்தை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் அடுத்த திருவாமத்தூரில் எரிசாராயம் கடத்தப்படுவதாக  மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்ட போது,  ஒரு ஓடையில் 40 கேன்கள் எரிசாராயம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர், சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த எரிசாராயத்தினை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை பதுக்கி விட்டு தப்பியோடியவர்களை தேடி வருகினர்.

Exit mobile version