ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர்- தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ளபாரமுல்லா மாவட்டத்தின் வாட்டர்கம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட பயங்கரவாதியை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version