பழனி முருகன் கோயிலில் 2வது ரோப்கார் அமைக்கும் பணி ஆய்வு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் இரண்டாவது ரோப்கார் மற்றும் பஞ்சாமிர்த தயாரிப்பு நிலையங்களை இந்து சமய அறநிலையத்துறை செயலர் அபூர்வ வர்மா ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் இரண்டாவது ரோப்கார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை செயலர் அபூர்வ வர்மா மலைக்கோயிலில் நடைபெற்று வரும் முதல் ரோப்கார் பராமரிப்புப் பணிகள், அடிவாரத்தில் நடைபெறும் இரண்டாவது ரோப்கார் கட்டமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற பஞ்சாமிர்த நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார். பஞ்சா மிர்த நிலையத்தை தூய்மையாக பராமரிக்கும்படி கோயில் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Exit mobile version