ஒரே ஆண்டில் இரண்டாவது முறை நிரம்பிய மஞ்சளாறு அணை

தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சளாறு அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக முழுக்கொள்ளவை எட்டியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மஞ்சளாறு அணைக்குக் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் வந்தடைகிறது. கடந்த சில நாட்களாகக் கொடைக்கானல் பகுதிகளில் பெய்து வந்த பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது. அக்டோபர் 30ஆம் தேதி அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து நவம்பர் இரண்டாம் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீர் இருப்பு குறைந்து வந்த நிலையில், சில நாட்களாக பெய்து வந்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அணை இரண்டாம் முறையாக முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.

Exit mobile version