இரண்டாவது ஒருநாள் போட்டியில் 200 ரன்களைக் கடந்த இந்திய அணி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் நூறு ரன்கள் எடுத்து சாதனை படைத்தனர்.

கியரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், சென்னையில் நடந்த முதலாவது போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றுத் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து, இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிபந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்தனர். இந்தக் கூட்டணி 200 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 28ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அதேபோல், மற்றொரு தொடக்க வீரரான லோகேஷ் ராகுலும் தனது பங்குக்கு 3ஆவது சதத்தைக் கடந்தார்.

Exit mobile version