உதகையில் இரண்டாவது நாளாக பெய்த கனமழை

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 2 ஆவது நாளாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

தமிழகம் முழுவதும் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, பிங்கர் போஸ்ட், தலைகுந்தா, சோலூர், நஞ்ச நாடு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 2 ஆவது நாளாக 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதையடுத்து தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Exit mobile version