நடப்பு கல்வியாண்டில் 5.59 கோடி புத்தகங்களை அச்சடித்து பள்ளிக் கல்வித்துறை சாதனை

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்காக நடப்பு கல்வியாண்டில் 5 கோடியே 59 லட்சம் புத்தகங்களை அச்சடித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சாதனை படைத்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு புத்தகங்களை அச்சடித்து விநியோகித்து வருகிறது.

நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தில் அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு 3 கோடியே 27 லட்சத்து 950 புத்தகங்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு 2 கோடியே 31 லட்சத்து 70 ஆயிரத்து 650 புத்தகங்களும் அச்சடித்து விநியோகிக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத்தில் ஒட்டு மொத்தமாக 5 கோடியே 59 லட்சம் புத்தகங்கள் விநியோகித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சாதனை படைத்துள்ளது.

Exit mobile version