திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞரை தலைமைக் காவலர் ஒருவர் தாக்கிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பொன்னேரி அருகே தடபெரும்பாக்கம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சித்த காவலர் லத்தியால் தாக்கியுள்ளார். இதனால், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இந்தநிலையில், காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.