தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் பட்டாசு விற்பனை தீவிரம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் சிவகாசியில் பட்டாசு விற்பனை தீவிரமடைந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, சாத்தூர், ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஆன்லைன் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், பட்டாசு வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிவகாசிக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த ஆண்டு குழந்தைகளை கவரும் வகையில் 20 வகையான புது ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது. வண்ண, வண்ண கம்பி மத்தாப்புகள், புதுமண தம்பதிகள் கொண்டாடும் தலை தீபாவளிக்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட பட்டாசுகள், 5 நிமிடங்களுக்கு மேலாக வண்ண நிறங்களில் வெடிக்கக்கூடிய பட்டாசுகள் என பலவகையான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும், வாடிக்கையாளர்கள் வாங்கி செல்வதற்கு ஏற்றவாறு பலவிதமாக கிப்ட் பாக்ஸ்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

Exit mobile version