ஈரோட்டில் மூதாட்டியின் சொத்தை திருப்பி பெற்று கொடுத்த ஆட்சியர்

தாய் – தந்தையரிடம் சொத்துக்களைப் பெற்றுக் கொண்டு, பராமரிக்காமல் விட்ட மகன் மற்றும் பேரன்களிடம் இருந்து சொத்துக்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற மூதாட்டி, தன்னிடம் இருந்து சொத்துக்களை மகன் வாங்கிக் கொண்டு, தன்னை கைவிட்டதாக ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதேபோல், வீரப்பன்பாளையத்தைச் சேர்ந்த 81 வயது பெண்மணி வள்ளியம்மாள், தன்னை மகன்கள் கைவிட்டு விட்டதாகவும், தன்னிடம் இருந்து சொத்துக்கள் பேரன்கள் தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்த ஆட்சியர் கதிரவன், வள்ளியம்மாளின் மகனிடம் இருந்து சொத்துக்கள் பெறப்பட்டு மீண்டும் அவரிடம் அளித்தார். இதேபோல் பேரன்கள் இருவரிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று வள்ளியம்மாளுக்கு பெற்றுக் கொடுத்தார்.

Exit mobile version