சங்ககிரியில் ஓடும் ரயில்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற கொள்ளை சம்பவம்

சேலம் மாவட்டம் சங்ககிரியில் ரயில்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். சங்ககிரியை அடுத்த வைகுந்தம் மற்றும் காளிப்பட்டி பிரிவு அருகே ரயில்வே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ரயில்கள் 20 கிலோ மீட்டர் வேகத்திலேயே செல்கின்றன. இதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பயணிகளிடம் இருந்து நகைகளை கொள்ளையடித்துச் செல்வதாக காவல்துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன.

மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் ரயில்வே காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் தங்கியுள்ள வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சந்தேகப்படும் படியான நபர்கள் என ஏராளமானோரிடமிருந்து கை ரேகைகள் மற்றும் முகவரிகளை பெற்றுள்ள காவல்துறையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version