கடப்பாரையை கொண்டு செல்போன் கடையை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

சென்னை வில்லிவாக்கத்தில் கடப்பாரையை கொண்டு செல்போன் கடையை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம் பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா என்பவர் வில்லிவாக்கம் பாட்டை ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை கடை அருகில் வசிக்கும் மீரான் என்பவர், செல்போன் கடைக்குள் சிலர் பேசும் சத்தம் கேட்டு, தட்டி கேட்க முயன்ற போது பயங்கர ஆயுதங்களுடன் வெளியே வந்த மர்ம நபர்கள், அவரை தாக்க முயன்றுள்ளனர். அங்கிருந்து தப்பிய மீரான், கடை உரிமையாளர் முஸ்தபாவிற்கு தகவல் அளித்துள்ளார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். 94 ஆயிரம் ரூபாய், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த ஐசிஎப் போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Exit mobile version