பாஜகவின் நற்பெயரை ஆம் ஆத்மி அரசு களவாடி விட்டது – அமைச்சர் அமித் ஷா

டெல்லியில் மத்திய அரசு செய்துள்ள வளர்ச்சித் திட்டங்களின் நற்பெயரை ஆம் ஆத்மி அரசு தங்களுடையதாகக் கூறி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா டெல்லியில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மத்திய அரசின் திட்டப்படி நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதைத் தாங்களே செய்ததுபோல் டெல்லியின் ஆம் ஆத்மி அரசு விளம்பரம் செய்து நற்பெயரைக் களவாடிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். இதேபோல் டெல்லியில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் வீட்டு வசதித் திட்டங்களுக்கும் மாநில அரசு உரிமை கொண்டாடி வருவதாகத் தெரிவித்தார். மத்திய அரசால் வீட்டுவசதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் இடங்களில் 30 விழுக்காடு அளவு பசுமைப் பரப்பு இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Exit mobile version