மீதமுள்ள ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய நிலையில், எஞ்சிய ஆசிரியர்களும் பணிக்கு திரும்பி சமுதாய கடமை ஆற்ற வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல மாநிலங்கள் 7 வது ஊதியக்குழுவை அமல்படுத்தாத நிலையில் ,தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்த போதும் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஊதிய சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு வழங்கியதாகவும் அவர் கூறினார். போராட்டத்திற்கு இது சரியான தருணம் அல்ல என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். 

Exit mobile version