வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்ததால் விபரீதம்

தூத்துக்குடி மட்டக்கடை வடக்கு ராஜா தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற கடற்படை கேப்டன் ஸ்டீபன். மகள் ஷர்மிளா வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால், மருமகன் லிஸ்டனுடன் வர் தங்கி உள்ளார். இந்நிலையில் லிஸ்டன், நேற்று மாலை வெளியே சென்று இருந்தார். இரவு 8.40 மணி அளவில் வீட்டிலிருந்து கரும்புகை வெளியே வருவதை பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து, வீட்டின் உள்ளே மயங்கிய நிலையிலிருந்த ஸ்டீபனை மீட்டனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக ஏற்கனவே அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து ஸ்டீபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டி வெடித்தால் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

Exit mobile version