இந்தியாவில் உடல் ஆரோக்கியம் குறைந்து போனதற்கு காரணம் விளையாட்டில் கவனம் செலுத்தாதது தான்: சோம்தேவ் தேவ்வர்மன்

இந்தியாவில் உடல் ஆரோக்கியம் குறைந்து போனதற்கு காரணம் விளையாட்டில் கவனம் செலுத்தாமல்விட்டது தான் என டென்னிஸ் வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் ரோட்டரி கிளப் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய டென்னிஸ் வீரர் பத்ம ஸ்ரீ விருது பெற்ற சோம்தேவ் தேவ்வர்மன் ஆரோக்கியமானவர்களின் பட்டியலில் இந்தியா 100 ஆவது இடத்தை தாண்டி உள்ளதாகவும், அதற்கு காரணம் விளையாட்டில் மக்களுக்கு ஆர்வமின்மை காட்டுகிறது எனவும்,குழந்தை பருவத்திலேயே விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகளை கண்டறியமுடியும் என தெரிவித்துள்ளார். வாழ்க்கையின் கடைசியில் ஆரோக்கிய வாழ்வுமும், மகிழ்ச்சியும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து சோம்தேவ் தேவ்வர்மன் மற்றும் ஒய்.ஜி பார்த்தசாரதி ஆகியோருக்கு ரோட்டரி கிளப் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

Exit mobile version