13 வாக்குச்சாவடிகளில் வரும் 19 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும்…

மறு வாக்குப்பதிவிற்காகவே கோவையிலிருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 46 வாக்குச்சாவடிகளில் 43ல் மறுவாக்குப்பதிவு இல்லை என்றார். மீதமுள்ள 3 வாக்குச்சாவடிகளுக்கும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 வாக்குச்சாவடிகளுக்கும் சேர்த்து 13 வாக்குச்சாவடிகளுக்கு வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.

மறு வாக்குப்பதிவு சாவடிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றால் வாக்காளர்கள் 2 முறை வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார். வேலூர் மக்களவை தேர்தலை பொருத்த வரை, தலைமை தேர்தல் ஆணையத்திடமிருந்து தகவல் வரவில்லை என்று தெரிவித்தார்.

Exit mobile version