வேலூர் தொகுதிக்கு மறுதேர்தல் தற்போதைக்கு வர வாய்ப்பில்லை-சத்யபிரதா சாஹூ தகவல்

வாக்கு எண்ணிக்கை நடத்துவது தொடர்பாக பயிற்சிகள் நடைபெற்றுவருவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அவர், விரைவில் தேர்தல் நடத்தும் அலுவர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்கு சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் எனவும் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் போது, பாதுகாப்பிற்காக கூடுதலாக மூன்று கம்பெணி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றம் செய்வது தொடர்பாக, அரசியல் கட்சிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தேனி மற்றும் ஈரோட்டில் மட்டுமே மறு வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், மற்ற இடங்களில் விவிபேட் மூலம் வாக்கு எண்ணிக்கைதான் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். வேலூர் தொகுதிக்கு மறுதேர்தல் தற்போதைக்கு வர வாய்ப்பில்லை என்றும், இடைத்தேர்தல் போன்று அதை உடனடியாக நடத்த முடியாது என்றும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

Exit mobile version