ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஏப்ரல், மே மாதங்களை தொடர்ந்து, ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு இரண்டாவது முறையாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று தொலைக்காட்சி மூலமாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வரும் நடவடிக்கைகளை முதலமைச்சர் பட்டியலிட்டார். கொரோனா பரவலை தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் 4 முறை ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறிய முதலமைச்சர், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

 

Exit mobile version