வரும் 20ம் தேதி தொடங்குகிறது மாநிலங்களவை கூட்டத்தொடர்

மாநிலங்களவை கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் வருகிற 17ம் தேதி தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 2 நாளில் புதிய எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். 19ம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார். 20ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். ஜூலை 26ம் தேதி கூட்டத்தொடர் முடிவடைகிறது.

இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் வருகிற 20ம் தேதி தொடங்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மாநிலங்களவை பொதுச் செயலாளர் தேஷ் தீபக்வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடியாக கவனிக்க வேண்டிய அரசு அலுவல்கள் காரணமாக மாநிலங்களவையின் கூட்டத்தொடர் ஜூன் 20ம் தேதி தொடங்கி ஜூலை 26ம் தேதி முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version