மழைப் பொழிவு குறைந்ததால் காவிரியில் நீர் வரத்து குறைவு

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது..

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 8,000 கன அடியாகக் குறைந்துள்ளது. இதனால் காவிரியில் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. நீர்வரத்து குறைந்த போதிலும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version