கடுமையான வெயிலில் இருந்து மக்களை குளிர்வித்த மழை

பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை வெப்பம் தணிந்து இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதனையடுத்து வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் பழனி, ஆயக்குடி, நெய்காரப்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Exit mobile version