தமிழகம் முழுவதும் ஆவின் பார்லர் பொருட்கள் தரம் கேள்வி குறியாகியுள்ளது

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவின் பார்லரில் காலாவதியான மோர் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆவின் நிறுவனத்தில் இருந்து, தினசரி பல லட்சம் லிட்டர் ஆவின் பாலும், பால் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள், ஆவின் பொருட்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆவின் பார்லரில், காலவதியான மோர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் காவல்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் விற்பனை செய்யப்படும் ஆவின் மோர் காலாவதியாகியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் பார்லர்களில் பொருட்களின் தரம் கேள்வி குறியாகியுள்ளது.

இதனால் ஆவின் பொருட்களை வாங்குவதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Exit mobile version