மக்களுக்கு சேவை செய்வதே பா.ஜ.க.வின் நோக்கம்

மக்கள் சேவையை கருதி ஆட்சிக்கு வர பாஜக விரும்புவதாக தெரிவித்த பிரதமர் மோடி, அதிகாரத்தை கைப்பற்றுவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என குறிப்பிட்டார். அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம் என்றும் மருதமலை முருகனுக்கு அரோகரா என தமிழில் தனது உரையை பிரதமர் மோடி துவங்கினார். தமிழ் மொழி தொன்மையானது என்றும், தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் புகழ்பெற்றது என்றும் குறிப்பிட்டார்.

அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே எதிர்கட்சிகளுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவை செய்யவே பா.ஜ.க. ஆட்சிக்கு வர விரும்புவதாக தெரிவித்தார்.

Exit mobile version