விமான நிலையம் அமைக்க தொடரப்பட்ட பொது நல வழக்கு தள்ளுபடி

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஓசூரை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் இங்குள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களையும், விளைவிக்கப்படும் ரோஜாக்களையும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நேரடி விமான சேவை கோரி மத்திய, மாநில அரசுக்கும், விமான நிலையத்திற்கும் மனு அளித்துள்ளார். இந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து சிலம்பரசன் என்பவருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Exit mobile version