சென்னை மின்சார ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புறநகர் ரயில் பயணத்திற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

இன்று முதல் 20ம் தேதி வரை சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புறநகர் ரயில்களில் 50 சதவீத இருக்கைகளுடன், மத்திய அரசு ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின் மூலம் செங்கல்பட்டு வழித் தடத்திலிருந்து சென்னைச் செல்லும் பயணிகளும், கும்மிடிப்பூண்டி தடத்தில் இருந்து சென்னை செல்பவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

Exit mobile version