ஒட்டன்சத்திரத்தில் பழமையான கிணறு தூர்வாரப்பட்டதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழமையான கிணறு, தூர்வாரப்பட்டதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் இரண்டாவது வார்டு பகுதியான பெரியான்செட்டி பட்டியில் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கிணறு உள்ளது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம்  நகராட்சியின் துறை சார்ந்த அதிகாரிகள் இதனை நேரடியாக ஆய்வு செய்து, கிணற்றை தூர்வாரி, மின் மோட்டார் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கும்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Exit mobile version