உதகையில் சுற்றித்திரியும் புலியால் பொதுமக்கள் அச்சம்

உதகை அருகே சுற்றித் திரியும் புலியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உதகை கோல்ப் விளையாட்டு மைதானத்தில் புலியின் நடமாட்டம் இருந்ததால் கோல்ப் விளையாடுவதற்கு 3 நாள்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிங்கர் போஸ்ட் – கோல்ப் கிளப் சாலை வழியாக நடைப்பயிற்சி மேற்கொள்வதும் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், உதகை, பழைய மைசூரு சாலை பகுதியில் வயதான புலி ஒன்று பதுங்கியிருப்பதாகவும், வயது மூப்புக் காரணமாக இரை தேட முடியாததால் அங்கேயே அது சுற்றி வருவதாகவும் வனத் துறையினர் தெரிவித்திருந்தனர். தீட்டுக்கல் மந்து பகுதியில் உள்ள பொதுமக்கள் புலியை பார்த்து வனத்துறையிருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பொதுமக்கள் வனப்பகுதிற்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Exit mobile version