ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து சிக்னல்களை பராமரித்து தர பொதுமக்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை பராமரித்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான ஆன்மிக தலங்கள், அதிக அளவில் உள்ளன. மேலும் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், நகர் பகுதி அமைந்திருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக வந்து செல்கின்றன. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள சில போக்குவரத்து சிக்னல்கள் தற்போது சரியாக இயங்கவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து காவலர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகளை தடுக்க நகர் பகுதியில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் மாவட்ட நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version