திமுகவினர் மீது பொதுமக்கள் கோபம்

கொடைக்கானலில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் திமுகவினர் வாக்கு சேகரித்ததால் பொதுமக்களின் கோபத்துக்கு ஆளானர்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காமராஜர் சாலை பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் வழிபாட்டை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்தபடி நின்று வாக்கு சேகரித்தனர்.இதனால் அவ்வழியே வந்த வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் திமுகவினர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது .

Exit mobile version