கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் : நாராயணசாமி மீது பொதுமக்கள் அதிருப்தி

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தேவையற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக புதுச்சேரி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, முதலமைச்சர் நாராயணசாமி இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. ஆளுநர் மாளிகை முன்பு மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

துணைநிலை ஆளுநருக்கு எதிராக தேவையின்றி முதலமைச்சர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சென்னை புறப்பட்டுச் சென்றார். பின்னர் அவர் டெல்லிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version