போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் பட்டியலை உடனடியாக வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. தமிழகம் முழுவதும் ஜனவரி 22 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பெயர்களை பள்ளிக்கல்வித்துறை மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. எந்தெந்த நாட்களில் யார், யார் போராட்டம் நடத்தினார்கள் என்பதை தேதியுடன் குறிப்பிடவும் வலியுறுத்தியிருக்கிறது.

Exit mobile version