அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் கண்காணிக்கலாம்

அரசின் திட்டங்கள் குறித்த கண்காணிப்பை பிரதமர் அலுவலகம் மேற்கொள்ளலாம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரபேல் விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தவிர பிரதமர் அலுவலகமும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரபல ஆங்கில நாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி குறித்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அளித்த நேர்காணலில் பேசிய நிர்மலா சீதாராமன், அரசின் திட்டங்களை பிரதமர் அலுவலகம் கண்காணிக்கலாம் என தெரிவித்தார்.

Exit mobile version