பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – திருமாவளவன் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பாஜக அரசு மறைமுகமான தேர்தல் யுக்தியை கையாளுகிறது என குற்றம் சாட்டினார். புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version